Wednesday, May 9, 2012

என்றும் நீயே என் முதல் காதல்


என்றும் நீயே என் முதல் காதல்
வான் நீலம் தொட்ட ஆலயம்
மண்ணின் நிறம் காக்கும் விவசாயம்
மழலையாய் தத்தி தாவும் ஆறுகள்
கரையோரம் நெடுந்து நிற்கும் மரங்கள்
உரையாடும் தலை ஆட்டி பொம்மைகள்
தமிழுக்கு
உரம் போடும் கலாச்சார முறைகள்
சொல்வது அறியாது விழிக்கிறேன் உன் அழகை கண்டு
நாதம் தந்தாய் வீணை கொண்டு
கலை வளர்த்தாய் ஓவியம் தந்து
குலம் காத்தாய் சோழனை படைத்து
தஞ்சை தட்டு , தவில் , போகம் தரும் நிலம் ,இசை மேதைகள் , நாட்டிய கலைகள் ..
நான் மிளிர கேளாமல் மென்மேலும் கொடுத்தாய் …..
உன் மடி மீது பிறந்தேன்
உன் துணை கொண்டு வளர்ந்தேன்
உன்னை பிரிந்த போதிலும்
உன் புகழ் பாட துடிக்கிறேன்
என் காதல் சொல்ல தவிக்கிறேன்
இந்த வலைதளத்தை உனக்காக சமர்பிக்கிறேன்


6 comments:

  1. Wow! Nice!

    Please continue blogging!

    Thanks,
    Ashok

    ReplyDelete
  2. kudos to your initiative to dedicate a blog to your home town .. nice poem too

    ReplyDelete
    Replies
    1. not any specific dedication..just like tat it happend...tnx for ur comment..

      Delete
  3. kavingar Kasi!!!!. awesome reallygood.

    ReplyDelete
  4. appa nee review podratha vida kavithaiyum serthu eluthu.....

    ReplyDelete