Tuesday, January 29, 2013

புத்தகம் : நிர்வாண நகரம்


புத்தகம் : நிர்வாண நகரம்

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 100 [குத்துமதிப்பா]
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்]
செலவிட்ட நேரம் : 3 நாட்கள் .[2-3 மணி நேரத்தில் படிக்கலாம்]

இது சுஜாதாவின் இரண்டாவது புத்தகம் எனக்கு.சில பக்கங்கள் தாண்டியதும் ஏனோ அந்நியன் படத்தின் சில காட்சிகள் ஞாபகம் வந்தது.ஜன கூட்டம் அதிகமுள்ள நகரத்தில் தான் அதிமகமாக‌ மனிதர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்று FBல் ஒரு status நேற்று பார்த்தேன்.இந்த‌ கதையின் நாயகனும் அப்படிப்பட்ட தனிமையில் தான் இருக்கிறான்.நகரத்தின் மீது வெறுப்பு கொண்டு மொத்த கவனத்தினையும் தன் மீது  திருப்ப சில த‌வறுகள் செய்கிறான்.அவன் போடும் முடிச்சுகளை கனேஷ் , வசந்த் அவிழ்ப்பது சுவார்சியமாக அமைந்திருக்கும்.[இதற்கு மேல் இந்த கதை சொன்னால் படிக்கும் போது சுவாரசியமாக இருக்காது.]க‌தை சொல்லும் விதம் நம்மை புத்த்கத்தை விட்டு நகர விடாது.ஆனால் கதையின்  முடிவை கணிக்க முடிந்தது.

இதனை படித்த பிறகு ... நண்பர் ஒருவர் பரிந்துரை படி அடுத்து கொலையுதிர் காலம் படிப்பதற்காக‌ காத்திருக்கிறேன்.[யாராவது வைச்சிருந்தா சொல்லுங்க]

குறிப்பு : டைரக்டர்  வசந்த் இந்த பெயரை  கனேஷ் , வசந்த்  கதைகளின் தாக்கத்தினால் வைத்ததாக சமீபத்தில் படித்தேன்.

Wednesday, January 9, 2013

புத்தகம் :ஜல தீபம்.



புத்தகம் :ஜல தீபம்.

ஆசிரியர் : சாண்டில்யன்
பக்கங்கள் : 3 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 3-4 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]

கனோஜி ஆங்கரே(1698–1729) : இவர் தான் முக்கியம்.


நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன்.குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன்.அவரை பற்றின சில குறிப்புகள்....
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14094:2011-04-11-14-11-16&catid=26:india&Itemid=135%7C


மராத்திய பகுதிதியின் கடல் தளபதி (கடல் கொள்ளையன் என்று கூட அழைக்கப்பட்டாராம்).இவரால் தான் ,  ஆங்கில அரசால்அவ்வளவு சுலபமாக மராட்டிய அரசுக்குள் நுழைய முடியவில்லையாம்.

http://en.wikipedia.org/wiki/Kanhoji_Angre

File:Kanhoji Angre.jpg



 சாண்டில்யன் , கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு .கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது.அவருடைய 10 வருட முயற்சியில் உருவானது தான் இந்த  ஜல தீபம்.


நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது.நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்]  தமிழனாக வைத்திருந்தார்.இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே.ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார்.

நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.முக்கியமாக , ஜச்ஞீரா [Janjira fort ],இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும்.கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது.









மேலே குறிப்பிட்ட இடங்களின் சில புகைப்பட தொகுப்புகள்
http://www.shivchhatrapati.com/showgal.php?gid=16&act=next&max=150

[படிக்கும் போது , ரத்ன‌கிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது]


தானே,கல்யான் .. மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி].நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது.


நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார் , முக்கிய கதாபாத்திரமாக.இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார்.

3 நாயகிகள் , வர்ணனைக்கு பஞ்சமில்லை.சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்] .மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது  கொஞ்சம் அதிகமோ என்று தோனிய‌து.

படிக்கும் போது , சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம்  கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும்.