Tuesday, January 29, 2013

புத்தகம் : நிர்வாண நகரம்


புத்தகம் : நிர்வாண நகரம்

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 100 [குத்துமதிப்பா]
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்]
செலவிட்ட நேரம் : 3 நாட்கள் .[2-3 மணி நேரத்தில் படிக்கலாம்]

இது சுஜாதாவின் இரண்டாவது புத்தகம் எனக்கு.சில பக்கங்கள் தாண்டியதும் ஏனோ அந்நியன் படத்தின் சில காட்சிகள் ஞாபகம் வந்தது.ஜன கூட்டம் அதிகமுள்ள நகரத்தில் தான் அதிமகமாக‌ மனிதர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்று FBல் ஒரு status நேற்று பார்த்தேன்.இந்த‌ கதையின் நாயகனும் அப்படிப்பட்ட தனிமையில் தான் இருக்கிறான்.நகரத்தின் மீது வெறுப்பு கொண்டு மொத்த கவனத்தினையும் தன் மீது  திருப்ப சில த‌வறுகள் செய்கிறான்.அவன் போடும் முடிச்சுகளை கனேஷ் , வசந்த் அவிழ்ப்பது சுவார்சியமாக அமைந்திருக்கும்.[இதற்கு மேல் இந்த கதை சொன்னால் படிக்கும் போது சுவாரசியமாக இருக்காது.]க‌தை சொல்லும் விதம் நம்மை புத்த்கத்தை விட்டு நகர விடாது.ஆனால் கதையின்  முடிவை கணிக்க முடிந்தது.

இதனை படித்த பிறகு ... நண்பர் ஒருவர் பரிந்துரை படி அடுத்து கொலையுதிர் காலம் படிப்பதற்காக‌ காத்திருக்கிறேன்.[யாராவது வைச்சிருந்தா சொல்லுங்க]

குறிப்பு : டைரக்டர்  வசந்த் இந்த பெயரை  கனேஷ் , வசந்த்  கதைகளின் தாக்கத்தினால் வைத்ததாக சமீபத்தில் படித்தேன்.

1 comment:

  1. இந்த கதைதானே கணேஷ் வசந்தனு சுஹாசினி ஒரு சீரியல் டைரக்ட் பண்ணங்க . சுரேஷ் , விஜய் ஆதிராஜ் நடிசிருபங்கள

    ReplyDelete