Friday, February 22, 2013

புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...


புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 75 [14 கதைகள்]
ஒரு வரியில் : சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தின் வாழ்வை மையமாக கொண்ட‌  சிறுகதை தொகுப்பு
செலவிட்ட நேரம் : 5 மணி நேரம்.

சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து வாழ்வின்(பள்ளி மற்றும் கல்லூரி) நினைவுகளை அழகிய சிறுகதைகளாக வழங்கியுள்ளார்.ஒரு கதையில் நான் சிறு வயதில் விளையாடிய "கவட்டை" (ஹாக்கி போல அனவரிடமும் குச்சி இருக்கும் , ஒருவனது குச்சியை அனைவரும்    தள்ளிக் கொண்டே போக வேண்டும், அவன் வந்து குச்சியை மீட்க வேண்டும்.மற்றவர்கள் குச்சியை..pass  செய்து அவனை முடிந்த வரை ஒட விட வேண்டும்.)  பற்றி இதில் வரும் (வேறு பெயரில்)...அது என்னை மிகவும் கவர்ந்தது.

நிறைய இடங்களில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு பத்திரிக்கையில்(கையால் எழுதி) எழுதிய அனுபங்கள் இருக்கும்.அவரது எழுத்து பயணத்துக்கு அடிதள‌மாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.எனக்கு மிகவும் பிடித்த கதை என்றால் .. பேப்பரில் பேர்,சின்ன ரா,கடைசியில் உள்ள இரு பாட்டி கதை (ம்று,காதல் கடிதம்)...

எளிய நடை நம்மை அவரோடு பயணம் செய்ய வைக்கும்...

Thursday, February 14, 2013

புத்தகம் : கொலையுதிர் காலம்


புத்தகம் : கொலையுதிர் காலம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 360
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்].பிசாசு நம்பிக்கை vs விஞ்ஞானம்...முடிவு யாரின் பக்கம்..இதான் கதை...
செலவிட்ட நேரம் : 5-6 மணி நேரம்

நிர்வாண நக‌ரம் (http://idaivaellai.blogspot.in/2013/01/blog-post_29.html)  பற்றி எழுதிய போது   நண்பர் ஒருவர்..கொலையுதிர் காலம் படிங்க ரக‌ளையா இருக்கும்னு சொன்னார்.அவர் சொன்னது உண்மை தான்.எனது தஞ்சை - சென்னை ரயில் பயணத்தின் போது ப்டித்தேன்.சோழன் எக்ஸ்ப்ரசை விட வேகமாக சென்றது.முன்னுரையின் போதே சுஜாதா இதன் முடிவு பல பேருக்கு விருப்பமில்லாமல் போகலாம் என்று எழுதிருந்தார்.ஆதலால்,நான் கொஞசம் உஷாராகவே இருந்தேன்.மொட்டையாக முடிய போகுது என்று எதிர்பார்த்தே படித்தேன்.

1980'ல் லேசர் பற்றி பேசுகிறார்.3டி உருவம் பற்றி பேசுகிறார்.படிக்கும் போது பிரமிப்பாக இருந்தது.

பி.கு : நான் வாங்கிய புக்கில் சில எழுத்துக்கள் அச்சிடாமல் இருந்தது.[மூன்று - மூ இருக்காது]

Monday, February 4, 2013

புத்தகம் :சிவகாமி சபதம்


படிமம்:Sivakamiyin.jpg
புத்தகம் :சிவகாமி சபதம்
ஆசிரியர் : கல்கி
பக்கங்கள் : 4 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 5-6 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]

மீண்டும் கல்கியிடம் புத்தகம் மூலம் அறிமுகமாகிறேன் அதே கலத்தில்[சரித்திர நாவல்]...சில புத்தகங்கள் படிக்கும்  போது அதன் சம்பந்தமான் நிகழ்வுகள் தானா நடக்கும்.அப்படி தான் போல நான் அஜந்தா,எல்லாரோ வை சுற்றி பார்த்தது.இந்த கதையின் முக்கிய அம்சமாக அஜந்தா வின் ஓவிய ரகசியம் இருந்தது.

பல்லவ காலத்தின கதை...அதுவும் முக்கியமாக மாமல்லபுரம் [Mahabalipuram]   சிற்பங்களை மற்றும் சரித்திர போர் நிகழ்வுகளையும் மையமாக கொண்டவை...நான் சென்னையில் இருந்த 1.5 வருசத்தல .. ஒரே ஒரு தடவை தான் மாமல்லபுரம் போயிருக்கேன்.அதுவும் அந்த சிற்பங்களை எல்லாம் கவணிக்கவே இல்லை...ஆனால் இதை படிக்கும் போது , மாமல்லபுரம்  சென்று நன்றாக சுற்றி பார்த்தேன்.

அஜந்தா , எல்லோரா.....
இந்த கதையில நம்ம பல்லவ ராஜாவின் முக்கிய எதிரி புலிகேசி தான்...புலிகேசியின் வாதாபியின் நகரத்தில் உள்ளவைதான் இந்த இடம்.

அஜந்தா , எல்லோரா சிலைகளுக்கும் , மாமல்லபுரத்தின் சிலைகளுக்கும் நிறைய ஒற்றுமை காணப்பட்டது.அதன் சில புகைப்பட்ங்கள் இங்கே......



Buddha.JPGRock cave temple 9 Mahabalipuram.jpg


Ajantha.JPGElephant_,_(2444512448).jpg

இதை பற்றி எஸ்.ரா விடம் மின்னஞ்சலில் கேட்ட போது..
அன்பு பிரபு

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி
அஜந்தா குடைவரைக் கோவில் பாதிப்பில் உருவானது தான் மாமல்லபுர சிற்பங்கள்
ஆகவே நெருங்கிய தொடர்பு இருக்கவே செய்கிறது
மிக்க அன்புடன்
எஸ்ராமகிருஷ்ணன்


இது சம்மந்தமா வேறு புத்த்கம் இருக்கானு தெரில...தெர்ஞா சொல்லுங்க...சரி கதைக்கு வருவோம்..கதாபாத்திரங்கள் பற்றி சின்னதா ஒரு குறிப்பு...




பரஞ்சோதி தான் கதையை துவங்குவார்.அவருடைய போக்கில் கதை நகரும்.காஞ்சியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் , அவர் செய்ய்ம் வீர தீர செயல்கள் அவரை பல்லவ தளப‌தியாக மாற்றும்.

ஆயனார் -  இவருடைய கலை திறமை இன்றும் அவர் புகழ் பாடுகிறது.அவருடைய மகள் சிவகாமி.[இவளின் நடனம் தான் சிறப்ப‌மாக மாறியது..பரதத்தின் அகராதி என கல்கி குறிப்பிடுகிறார்.

இளவரசர் , சிவகாமி காதல் வசம் படும் நிகழ்வு கல்கியின் எழுத்துகளில் நம்மை அழகாக கற்பனை செய்ய வைக்கும்.

புலிகேசி யின் படையெடுப்பு....கலை,காதல் வசமிருந்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றும்.போர் வராமல் இருவரும் சமாதானாம் அடைந்து புலிகேசி வாதாகபி திரும்பும்  போது சிவகாமி கடத்த படுகிறாள்.இதுவே பல்லவனின் வீரத்தை கேள்வி குறியாக மாற்றுகிறது.புலிகேசியிடம் சிக்கி வாதாபியில் சில இன்னல்களை சந்திக்க்றாள்.அதற்கு பழி தீர்க்க சபதம் கொள்கிறாள்.

அந்த சிவகாமி சபதம் நிறைவேறியது எப்படி,புத்த பிஷு யார்..?ஆயனாரின் கலை சேவை,பல்லவனின் கலை ஆர்வம்,புலிகேசியின் வில்லதனம்,சிவகாமியின் மீது யார் கொண்டிருந்த காதல் வெற்றியடைகிறது போன்ற முக்கிய அம்சங்கள் கதை படிப்போரை எங்கும் நகரவிடாமல் வைத்திருக்கும்.

கண்டிப்பா நீங்களும் படிங்க...