Monday, December 29, 2014

2014 வாசிப்பு - சிறுவர் இலக்கியம்

 சிறுவர் இலக்கியத்தில் இரண்டு சின்ன பிரிவுகள் இருக்கின்றது. அவை குழந்தைகள் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கியம். குழந்தைகள் இலக்கியம் எனப்படுவது எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான புத்தகங்கள். பெரும்பாலும் இவை பெற்றோர்களால் வாசித்து காட்டவேண்டியதாகவே இருக்கும். இந்த புத்தகங்கள் ஒரு மாய உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும். எந்த விஷயத்தையும் ஆழமாக பேசாமல் அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்ளும். தாங்கள் புழங்கும் உலகில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களை அறிமுகப்படுத்தும். விலங்குகள் பேசுவது போன்ற கதைகள் வரும். மொத்தத்தில் ஒரு பேண்டசி உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
மற்ற எல்லா எழுத்தும், புத்தகமும் சிறுவர்களுக்கானது. அது சிறுவர் இலக்கியம். இங்கே கதைகள் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கும், இன்னும் ஆழமான மாய உலகினை காட்டும், அறிவியல் கட்டுரைகள், நாவல்கள், கதைகள், மற்றும் இன்னபிற வடிவங்கள் சிறுவர்களுக்கு தேவை. 

‍- உமாநாத் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர்.


இந்த இரண்டு பிரிவுகள் அல்லாது மூன்றாவதாக சிறுவர்கள் உலகினை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவும் புத்தகத்தினையும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

5.பென்சில்களின் அட்டகாசம் - விழியன் ( குழந்தைகள் இலக்கியம் )




 சிறுவர்களுக்கு எனது முதல் தேர்வாக இருக்கும் புத்தகமிது. கதையோடு அழகிய படங்களும் உண்டு.எனது மகளுக்கு அந்த படத்தினை வைத்து தான் நான் கதை சொன்னேன்.வகுப்பில் அனைத்து பென்சில்களும் பள்ளி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் சுற்றுளா செல்கிறது . அவர்களுக்கு எதிராக சார்ப்பனர் வருகிறது , அங்கு தப்பித்து ஒரு ஆமையாரை பார்க்கிறது அவருடன் பேசிவிட்டு பத்திரமாக வகுப்பிற்கு திரும்புகிறார்கள்.ஆனால் வகுப்பு பூட்டியிருக்கிறது.உள்ளே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அவர்கள் எப்ப்டி உள்ளே செல்கின்றனர் , அடுத்த நாள் வகுப்பில் அவர்கள் என்ன வரைகின்றனர் என்பதுடன் முடிகிறது.விழியனின் படைப்புகளில் முதன்மையானது என்று சொல்லலாம்.உங்க வீட்டு சுட்டிஸ்கும் படித்துக் காட்டுங்கள்.இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.



6.துலக்கம் - பாலபாரதி ( பெற்றோர்களுக்கு )


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது


இந்தப் பழமொழி எதற்கு ஒற்றுப்போகுமோ இல்லையோ இந்த ஆட்டிசத்திற்கு ஒற்றும் போகும் என்கிறார் திரு.பாலபாரதி.ஆட்டிசம் என்ற வார்த்தையை முதன்முதலில் கேள்விப்பட்டது ஹரிதாஸ் என்ற திரைப்படம் மூலம் தான்.அந்த திரைப்படத்தை பார்க்க ஏனோ வாய்ப்பு அமையவில்லை.அதன் பிறகு ஆட்டிசம் துலக்கம் நூலின் மூலம் பரிட்சயமானது.ஆட்டிசம் பற்றி அறிமுகமில்லாத எனக்கு அதன் விவரங்களை அழகிய நெடுங்கதை மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.நமது ஒவ்வொரு வாழ்விலும், நட்பு வட்டத்திலோ,சொந்தத்திலோ கண்டிப்பாக ஆட்டிசம் கொண்ட ஒருவரையாது சந்தித்திருப்போம்.அவரும் நம்மைப் போல் ஆனால் என்ன , சற்று மன வளர்ச்சி கம்மியானவர்கள்,வெளியுலகத்துடன் பழக முடியாவதர்கள் என்பதெல்லாம் நமது புரிதலாக இருக்கும்.பல நேரங்களில் அவர்களுடன் எப்படி உரையாடுவது என்பது நமக்கு தெரியாத ஒன்று.அவர்களை பார்க்கும் போதெல்லாம் , சில கேள்விகள் நமக்குள் வரும்...அவர்களுக்கு ஏன் இப்படி ஆனது ,இது நோயா? அவர்களால் என்னென்ன செய்ய முடியும் ? அவர்களின் உலகம் என்ன? அவர்கள் வீட்டில் இருப்போர் மருத்துவரை அனுகினார்களா? சில நேரங்களில் அவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்து , வீட்டிலிருப்போர் ஒழுங்காக சிகிச்சை பண்ணி இருந்தா இவர்கள் குணமாகிருந்திருப்பார்களோ என்றெல்லாம் தோன்றும்.நம் வாழ்வில் சந்தித்த நபர் இந்த நூலில் உங்களோடு கண்டிப்பாக பயணிப்பார்.அவர்களைப் பற்றின புரிதல்கள் கண்டிப்பாக மாறும்.

ஆட்டிசம் என்பது நோயல்ல , அது ஒரு குறைபாடு என்பதிலிருந்து துவங்குகிறது.ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லாத சமூகம் குறைபாடுள்ள ஒருவனை எப்படி கையாள்கிறது என்பதே இக்கதையின் கரு.3-5 வயதுற்குள் இந்தக் குறைபாடுகளை கையாளுதலின் அவசியம் ,விழிப்புணர்வின் முக்கியம்,பெற்றோர்களின் தவிப்பு, மனநிலை,கோபம் என கதை நகர்கிறது.தமிழகத்தில் ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லை என்ற ஆசிரியரின் கவலை இந்தக் கதையை படித்து முடிக்கும் போது கண்டிப்பாக நமக்கும் தொற்றிக் கொள்ளும்.அந்தக் கவலைக்கு மருந்தாகவும் நமது என்னெற்ற கேள்விகளுக்கு விடையாகவும் இந்த துலக்கம் அமையும்.

ஆட்டிசம் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ள :http://blog.balabharathi.net/?page_id=25



7. குட்டி இளவரசன் (சிறுவர் இலக்கியம்)




இது ஒரு மொழிப்பெயர்ப்பு நூல் , தமிழில் 3 நபர்கள் மொழிப்பெயர்த்துள்ளனர்.இது தெரியாமல் மிகவும் சுருக்க வடிவத்தை வாங்கினேன். சற்று ஏமாற்றம் தான் . முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.ஆதலால் வாங்கும் போது மொழிப்பெயர்ப்பாளரை கவனித்து வாங்கவும்.கதையின் நாயகன் குட்டி இளவரசன் , அவன் ஒவ்வொரு கிரகமாக செல்கிறான், அங்கு அவன் சந்திக்கும் நபர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் வாசிப்பவரின் கற்பனைகளை தூண்டுவதாக அமைந்திருக்கும்.இந்தப் புத்தகம் பற்றி எஸ்.ரா நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறார்.
எஸ்.ரா வின் அறிமுகம் : http://www.sramakrishnan.com/?p=551




8.சீனிவாச இராமனுஜன் 125 - இரா - நடராசன் ( சிறுவர் இலக்கியம் )


இராமனுஜன் வாழ்வை வெறும் 125 வரிகளில் சொல்லியிருக்கிறார் நடராசன்.இராமனுஜன் பற்றின ஒரு தாக்கத்தை எளிய முறையில் சிறுவர் மனதில் ஏற்படுத்த இந்தப் புத்தகம் உதவும்.இராமனுஜன் பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள இது உதவாது.இராமனுஜம் பிறந்த 125 வருடங்கள் முடிந்ததை முன்னிட்டு இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.





9.விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் - இரா.நடராசன் (சிறுவர் இலக்கியம்)

2014ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருதுப் பெற்ற புத்தகம் . மருத்துவத்துறைக்கு சவாலாக இருந்த நோய்களுக்கான மருந்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்களை விக்ரமாதித்தன் மற்றும் வேதாளத்தின் உரையாடல்களை கொண்டு அழகாக விளக்கியிருப்பார் நடராசன்.ஆனால் ஒவ்வொரு கதையும் ஒரே மாதிரியான template ஆகவேயிருக்கும்.முதலில் வேதாளம் , விக்ராமதித்தனை போற்றி அப்புறம் என் கேள்விக்கு பதில் சொல்லு இல்லெயெனில் உன் தலை வெடித்து விடும் என்று சொல்லும் , கேள்வி இறந்தவரைப் பற்றி இருக்கும் , அவனது தீய செயல்களை காரணம் என வேதாளம் சொல்லும்.உடனே விக்ரமாதித்தன் அட முட்டாள் வேதாளமே என்று ஆரம்பித்து , அந்த இறப்பினைப் பற்றியும் அதற்கு காரணமாக இருந்த நோயினைப் பற்றியும் விளக்குவான்.அதன் மருந்து எவ்வாறு கண்டுப்பிட்க்கப்பட்டது ,அது எப்படி நடைமுறைக்கு வந்தது என்றிருக்கும்.தொடர்ந்து படித்தால் கொஞ்சம் போர் அடித்து விடும்.இதை தினம் ஒன்று என்ற ரீதியில் படித்தால் நன்றாக இருக்கும்.அப்படித்தான் நான் படித்தேன்.இந்தத் தகவல்களை படிக்கும் போது பொதுவான விஷயம் ஒன்றினை கவணிக்க முடிகிறது அது , மருந்துக்கள் முதல் முதலில் மனித உடலில் எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பது. யாரோ ஒரு ஏழை நோயாளியால் தொடர்ந்து சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது அப்பொழுது கைவிடப்பட்ட அந்த நோயாளியின் மீதே இந்த மருந்துக்கள் சோதனை செய்யப்படுகிறது..வெற்றி அடைந்தவை மட்டுமே இங்கு பேசுகிறோம்.தோல்விகளின் கதைகள் ஏதேனும் இருக்குமா என்று மனம் தானே ஓட்டிப் பார்த்து அவ்வப்போது அச்சம் அடைகிறது.






தொடரும்....

Sunday, December 28, 2014

2014 வாசிப்பு - சமூக நிகழ்வுகள்

2014 ல் எனது புத்தக தேடல் நன்றாக வளர்ந்ததாக ஒரு உணர்வு . நண்பர்கள் மூலமும் , இணைய‌த்தின் மூலமும்  நிறைய அறிமுகங்கள் கிடைத்தது . அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறேன் , வாய்ப்பு கிடைக்கும் போது வீட்டின் புத்தக அலமாரியை ரகசியமாக நிரப்ப வேண்டியது தான் .  2015 புத்தக திருவிழா கொண்டாட்டம் வேற முகப்புத்தகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இது தான் சரியான தருணம் என தோன்றுகிறது."டேய் மச்சி ஏதாச்சும் புக் சொல்லுடா " என்று கேட்கும் சில நண்பர்களுக்காகவும் , நான் வாசித்த அனுபவத்தை கொஞ்சம் அசைப் போடவும் அப்புறம் சிலர் சொல்வது போல கொஞ்சம் சீன் போடவும்...2014ல் நான் வாசித்த புத்தகங்களைப் பற்றி 4-5 வரிகள் எழுதலாம்னு இருக்கேன்.அதில் முதல் பதிவாக சமூக நிகழ்வுகளை குறைவான புனைவோடு பேசிய 4 புத்தகங்களைப் பற்றி ...


1.பெத்தவன் - இமையம்


தருமபுரி என்று சொன்னதும் நம் நினைவிற்கு தற்பொழுது வருவது இளவரசன் மற்றும் திவ்யாவின் தந்தை மரணமும் தான்.சட்டரீதியாக எதையும் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில் நம் மனதிற்கு தெரியும் இது ஜாதி எனும் சாத்தானின் செயல் என்று.அப்படி சாத்தானின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் பெத்தவன்.காதல் காதலித்தவர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ , கண்டிப்பாக ஜாதியையும் அதை சார்ந்த அரசியல் கட்சிகளையும் நன்றாக வாழ வைக்கிறது.காதலுக்கு பெத்தவன் தலையசைத்த பின்னரும் ஊரே வேசிப் பேச்சு பேசி ,அந்தப் பெண்ணின் உசுரை உருவ என்னென்ன பாடுபடுகிறது ஒரு கூட்டம்.அதற்கு கெளரவ கொலைன்னு ஒரு பெயர் வேற வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு கெளரவ கொலை தான் இந்த கதையின் தளம்.

புத்தகத்திலிருந்து சில வரிகள்...

“அப்பிடியா? ஒன்னெ நம்பறம். ஒன் வாக்குப்படியே வச்சிக்குவம். காரியத்த எப்பிடி முடிக்கப்போற அதெச் சொல்லு?” என்று துரை கேட்டான்.
“ஊரு சொல்றபடி.”
“பூச்சி மருந்த வாயில் ஊத்தி, ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக் கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக் கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும்” என்று இடுப்பில் குழந்தையை வைத்திருந்த பெண் சொன்னாள்.

2.தூப்பக்காரிமலர்வதி [ சாகித்ய அகாதமி - YUVA PURASKAR விருது பெற்ற நாவல்]


 சாலைகளில் அவ்வப்போது பாதள சாக்கடையிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்க்கும் காட்சி நம் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது . எந்தவித கவசமோ அல்லாது பாதுக்காப்பு முறையோ இல்லாமல் தான் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று , சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாய்வு தாக்கி இருவர் இறந்து விட்டனர்.காரணம் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு முறையும் வழங்கபடவில்லை.அவர்களது இறப்பு செய்தியாக வந்து மறைந்தும் விட்டது . தொழில்நுட்பம் எக்குத்தப்பாய் வளர்ந்து நிற்கிறது, ஏதேதோ சாதனங்கள் வந்துவிட்டது ஆனால் இன்னும் இவர்களது வாழ்வை எளிமைப் படுத்த ஒரு சாதனம் வந்தப்பாடில்லை.இந்த ஆதங்கத்தை புத்தகம் முழுதும் நாம் காணலாம்.சாலையிலோ , அலுவலகத்திலோ , ரயில் நிலையத்திலோ , பொது கழிவறையிலோ , மருத்துவமனையிலோ அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களின் வாழ்வை சற்று அவர்களது அருகில் நின்று பார்க்கும் உணர்வை இந்தப் புத்தகம் ஏற்படுத்தும்.

3.கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா


ஓசுர் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் தான் ஜாகிரின்
புத்தகங்கள்.படிங்க நல்லா இருக்கும் என்று விற்பனையாளரின் பேச்சைக் கேட்டு வாங்கியது . என் நல்ல நேரம் அவர் என்னை ஏமாத்தவில்லை.ஜாகிர் தமிழின் பஷீர் என்ற புத்தகத்தின் முன்னுரை என்னை சலிப்படையச் செய்தது .ஆனால் அவரது படைப்பு சலிப்படையச் செய்யவில்லை.
முஸ்லீம் சமூகம் பற்றி வெறும் மேலோட்டமான புரிதலே இருக்கிறது . அங்குள்ள வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நான் அறியாததே , ஏழை - பணக்கார பேதம் தொழுகும் இடத்தில் எவ்வாறு இருக்கும் , தெருக்களில் எப்படி இருக்கும்  என்று நாவல் பேசுகிறது.கதையின் நாயகனின் குடும்ப சூழ்நிலைகள் , மனநிலை பாதிக்கப்பட்டவன் என தெரிந்தும் அவனுக்கு அக்காவை மனம் முடித்து வைக்கிறாள் அன்னை.அக்கா வாழ்வில் எவ்வளவு நொடிந்து போகிறாள் , நாயகனுக்கு அறிமுகம் ஆகும் ஒரு சாமியார்.அவரது வாழ்வு என கதை நகர்கிறது.நாயகனின் பகடியை நாவல் முழுதும் ரசிக்கலாம். 

4.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா


இலக்கியத்தில் நாம் ரசித்த கதாப்பாத்திரங்களை வைத்து ஒரு படைப்பு வந்தால் நல்லா இருக்கும்ல , என்று நண்பர் கேட்டது , ஏனோ இந்தப் புத்தகம் வாசிக்கும் போது தோன்றிக் கொண்டே இருந்தது.ஏனென்றால் ஒரு படைப்பாளியின் வாழ்வை சித்தரிப்பதாகவே இந்த நாவல் நகர்கிறது.ஒரு நாவல் எழுதுவதற்காக மலை பாங்கான இடத்திற்கு தனது உதவியாளருடன் கதையின் நாயகர் ( எழுத்தாளர்) செல்கிறார்.அங்கு அவர்களுக்கிடையில் நடக்கும் சுவாரஸ்யமான பேச்சுகளும் சில ப்ளாஷ்பேக்குகளும்  தான் இந்த நாவல். எழுத்தாளர்களையும் இலக்கிய நிகழ்வையும் கேளியும் , கிண்டலும்  செய்வதாகத் தான் இந்த நாவல் இருக்கும் அதுவும் சிற்றிதழ் ஒன்றில் பிச்சைக்காரர் ஒருவரை பேட்டி எடுப்பதாக காட்சி வரும் பாருங்க , சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருப்பாரு ஜாகிர்.மெல்லிய புன்னகையோடு இந்த நாவலை வாசிக்கலாம்.

குறிப்பு : ஜாகிரின் இரண்டு நாவலிலும் A விஷயங்கள் இருக்கிறது .




தொடரும்

Thursday, November 20, 2014

சிறுவர் இலக்கியம்

(சஞ்சிகை இதழில் வெளியானது)

சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக‌ கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.
சென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.
maakadikaaram_bookஉலகத்தை காக்க ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகப்பெரிய கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த காவலனாக கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் நீர்மூழ்கிப் கப்பல் துணைக்கொண்டு அந்த இடத்தினை அடைகிறான். அங்கு அவனுக்கு அந்த கடிகாரம் தான் உலகத்தினை இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கு சாவிக் கொடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. அவன் பொறுப்பினை தவறும் பட்சத்தின் உலகம் அழிந்து விடும் என மாயன் காலண்டர் குறிப்புடன் கதை நகர்கிறது. மகாகடிகாரத்தின் ரகசியத்தினை நாயகன் உடைப்பதுடன் கதை முடிகிறது. மெல்லிய கதையாக இருந்தாலும் சிறுவர்களுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த அறிமுகங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
DSC00431_thumb2கதையின் துவக்கத்தில் ஏலகிரி மலையில் நாயகன் அப்பாவுடனும் தங்கையுடனும் செல்வதாக வரும்.அந்த வரியை படித்த உடனே நமது முதலாவது மலைப் பயணம் கண்டிப்பாக நினைவில் வரும். நீர்மூழ்கி கப்பல், கதாப்பாத்திரங்கள், மகாகடிகாராத்தின் அமைப்பு என ஒவ்வொன்றையும் நம் மனது கற்பனை செய்து கொள்வதையும் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனாக நம்மை நாமே உணர்வதும் இந்த புத்தகத்தின் வெற்றி என சொல்லலாம். நமது கற்பனா சக்திகளை இந்த புத்தகம் தூண்டிவிடும் பட்சத்தில் சிறுவர்களது கற்பனா சக்திகளை கண்டிப்பாக தூண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
நாளைய‌ கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.

Mad House

(மதிப்புரை தளத்தில் வெளியானது) 

“சரித்திரம் என்றால் தேதிகள் என்று என் சிறு வயது ஆசிரியர் என்னை நினைக்கவைத்தார்.அலெக்சாந்தரில் இருந்து ஆதித்த சோழன் வரைக்கும் தேதிகளை நான் மனனம் செய்ய வேண்டும்.ஒரு பாடத்தை எவ்வளவுக்கு வெறுக்கமுடியுமோ அவ்வளவுக்கு சரித்திரப் பாடத்தை வெறுத்தேன்.
வரலாறுதான் மனிதகளின் கதை என்பதையும், மனிதர்களின் கதைதான் இலக்கியம் என்பதையும் அந்த ஆசிரியர் எனக்குச் சொல்லிதர மறந்து விட்டார்.”
                                                                                                              -அ.முத்துலிங்கம்

“அப்பாடா இனிமே வரலாறு பக்கமே போக தேவையில்லை”, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் எனக்கு மனத்தில் தோன்றியது இதுதான். அந்த அளவிற்கு வரலாற்றுடன் எனக்குத் தகராறு. சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அதுவே என்னை வரலாற்றின் பக்கம் இழுத்தும் சென்றது. ஒரு புத்தகத்துடனான உறவு அத்துடம் முடிவதேயில்லை. ஒரு புத்தகம் மற்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்து கொண்டேயிருக்கிறது.வெட்டுப்புலி நாவல் பெரியார் பற்றின நிகழ்வுகளை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது. அதை தேடும்போது பகத் சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” அறிமுகமானது. பகத் சிங்கை தேடும் போது காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை தூக்கிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் என்ற செய்தி சுதந்திர போராட்டம் பற்றின நிகழ்வுகளை முழுதும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், சில புத்தகங்களை நாம் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியமேயில்லை, அதுவே நம்மைத் தேடி பிடித்து ஓடிவரும். அப்படி மதிப்புரை தளத்தின் மூலம் என் வாசல் தேடி வந்த புத்தகம் தான் மருதனின் “இந்தியப் பிரிவினை”.
பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன எவ்வாறு பிரிக்கப்பட்டது மற்றும் பிரிவினையில் ஜின்னா, நேரு, மவுண்ட் பேட்டன் போன்ற தலைவர்களின் நிலை என மூன்று தளங்களில் இந்த புத்தகம் பயணிக்கிறது.
அமிர்தசரஸ் ரயில் நிலையம் : 1947 ல் அமிர்தசரஸிற்கு வந்து சேரும் ரயிலில் துவங்குகிறது இந்தப் புத்தகம். தனது உறவினர்களுக்காக காத்துக்கிடக்கும் மக்களின் நிலையினை நினைத்து காந்தியிடமும் ஜின்னாவிடமும் நேருவிடமும் கற்பனையில் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்து சேர்ந்த ரயிலின் அமைதி நிலைக்கொள்ளச் செய்கிறது. ஏனென்றால் அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது வெறும் பிணங்களை மட்டும்தான். சிறுகதை போல் இருக்கும் அந்தக் கட்டுரையின் தலைப்பே “கல்லறை” தான். இரு தரப்பிலும் எண்ணற்ற இழப்புகள். காரணம் மதம், மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை. “ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டுமென்றால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தினால் போதும்” என்ற வரியை படிக்கும் போது நம் மனதிற்குள் எழும் கேள்விகளுக்கு பதில் எங்கு தேடியும் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.
Mad House: இதுதான் இந்தியப் பிரிவினையின் பொறுப்பை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கும்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் துவங்கிய புத்தகம் மெல்ல மெல்ல பிரிவினையின் ஆரம்பப் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. காங்கிரஸ் எவ்வாறு எதற்காகத் துவங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் எப்பொழுது யாரால் பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது, ஜின்னா ஏன் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார் என நகர்கிறது. ஒரு கட்டத்தில் காந்தி “ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும், முஸ்லீன் லீகிடமே இந்தியாவை ஒப்படைத்துவிடலாம்” என்றாராம். காந்திக்கு பிரிப்பதில் கடைசிவரை விருப்பம் இருந்ததேயில்லை. பிரிவு என்ற முடிவு வந்ததும் இங்கு கலவரங்கள் வெடிக்கும் என்ற பயம் அவருக்கு மட்டுமே இருந்தது. ஏனோ ஜின்னாவிற்கும் நேருவிற்கும் அப்படி தோன்றவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க இந்த இருநிலங்களையும், கலாசாரத்தையும் அறியாத ஒருவரே நியமிக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட கெடு ஆகஸ்ட் 15. இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் தனது வேலை சுலபமானது அல்ல என்பதை உணர்ந்து மவுண்ட்பேட்டனிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. நேருவிடமும் ஜின்னாவிடமும் பேச முடிவு செய்தார். இருவரிடமும் அவர் கேட்ட கேள்வி : “இது உங்கள் தேசம், உங்கள் மக்கள். உங்களுக்கு தேதி முக்கியமா அல்லது தவறுகள் இல்லாத பிரிவினையா?” அதற்கு இருவரிடமிருந்தும் கிடைத்த பதில் “தேதி”. பிரிவினை என்பது வெறும் நிலத்தோடு முடியவில்லை. சொத்துக்களும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சொத்துக்கள் என்றால் கசானாவிலுள்ள துட்டு முதல் அரசு அலுவலகத்திலுள்ள பேனா, மேசை, உடைந்த நாற்காலி, டாய்லட் கப் வரை. தனித்தனியாக அனைத்தின் பட்டியலும் உருவாக்கப் பட்டிருக்கிறது. நூலக புத்தகங்கள் கூட பாகம் 1 இங்கே பாகம் 2 அங்கே என பிரிக்கப்பட்டதாம். இதைப் படிக்கும் போது சிறுவயதில் நண்பருடனோ, சகோதரரிடமோ போட்ட சண்டை தான் நினைவிற்கு வந்தது. ஆனால் உண்மையில் வேறு வழியில்லாமல் இப்படி நடந்தது என்பதை புரிந்துகொண்டாலும், இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானது என்றே தோன்றுகிறது.
1947 ஆகஸ்ட் 15, இந்த நாள் எப்படி தீர்மானிக்கப்பட்டது? நமக்கு ஏன் இரவில் சுதந்திரம் கிடைத்தது? சுதந்திரத்தின் போது பூனேவில் சுவஸ்திக் சின்னம் உள்ள‌ கொடி ஒன்று ஏற்றப்பட்டது எதனால்? முஸ்லீம் லீக் போல இந்துக்களுக்கு ஒரு அமைப்பு ஏற்பட்டு அதுவே பின்னாளில் பிரிந்து கடைசியில் காந்தியைக் கொல்ல கோட்சே வந்தது என தகவல்களின் தொகுப்பாக நகர்கிறது. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேன்டும்” என காந்தி சொன்னார். ஆனால் ஜின்னாவோ குடும்பத்திலுள்ள சகோதரர்களின் பாகப் பிரிவு போல தான் இந்தப் பிரிவு என நினைத்திருக்கிறார். நேருவோ ஒரு படி மேல போய் பிரிந்தபிறகு இணையவும் வாய்ப்புள்ளதாக நினைத்திருக்கிறார். காந்தியைத் தவிர ஜின்னாவும் நேருவும் கலவரங்களை சிரிதும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். கலவரங்கள் எல்லை மீறிப் போகும் போது சுதந்திரமே தேவையில்லை என்ற மனநிலையில் நேரு இருந்தாராம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் போர் பாகிஸ்தானால்தான். அந்தப் போரில் இந்தியா வெற்றி அடைகிறது. அந்த சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டிய மீதி பணத்தை பற்றி யோசிக்க, காந்தி மட்டும் அதை கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இந்த மனப்பான்மை காந்தியைத் தவிர வேறு எவருக்கும் வராது எனத் தோன்றுகிறது. ஆனால் இது சரியானதா என்பது வாதத்திற்கு உரியதே. இந்தியாவில் சில சமஸ்தானங்களும் இருந்திருக்கிறது. அவைகளை இந்தியாவுடன் இணைக்கவும் ஏகப்பட்ட நடவடிக்கைகள் நடந்து இருக்கிறது. படேல் தான் அதை முன்நின்று நடத்தி இருக்கிறார். ஆர். எஸ். எஸ் வளர்ச்சி, கோத்ரா ரயில் சம்பவம், பாபர் மசூதி இடிப்பு, ஜின்னாவிற்குப் பிறகு பாகிஸ்தானின் நிலைபாடு என அனைத்தைப் பற்றின அறிமுகத்துடன் முடிகிறது இந்தப் புத்தகம்.
சுதந்திரம் அடைந்து விட்டோம், காந்தி, ஜின்னா, நேரு அனைவரின் காலம் முடிந்து விட்டது. ஆனால் மத வெறியால் துவங்கிய கலவரத்தின் காலம் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.
வாசிக்கும் போது எனக்கு சில இடங்களில் காலங்கள் பற்றிய குழப்பங்கள் ஏற்பட்டது. காலங்களின் வரிசையில் சம்பவங்கள் அடுக்கப்படாமல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். சுதந்திரப் போராட்டம் பற்றிய நிகழ்வுகள் பள்ளிப் பாடங்கள் மூலமாகவும் சில‌ திரைப்படங்களின் மூலமாகவும் மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கிறது. நம்மை சுற்றி தகவல்கள் நிறைந்திருக்கிறது, அதைத் தேடும் ஆர்வம் மட்டும் தான் இங்கு குறைவாக இருக்கிறது, அப்படி ஆர்வம் ஏற்படும் போது அதைத் தூண்டிக்கொண்டே இருத்தல் வேண்டும் பசியைத் தூண்டும் starters போல. அப்படி எனக்கு அமைந்த starters தான் இந்தப் புத்தகம்.

பயணம்



பேருந்து கிளம்பியும் அவனது தொல்லை எல்லையின்றி போய் கொண்டிருக்கிறது. அவன் நிஜமாகவே போனில் பேசுகிறானா என்ற சந்தேகம் கூட அந்த பேருந்திலுள்ள அனைவருக்கும் இருந்தது. போக்குவரத்து நெரிசல் வதைப்பது போதாது என இவனும் வதைத்துக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி நாளைக்கு தலைவர் படத்துக்கு புக் பண்ணிட்டேல…அப்படியே சாய்ந்திரம் ட்ரீட் யாருது..சரக்கிலாமலா…” என ஊரிலுள்ள நண்பர்கள் அனைவரைக்கும் வரிசையாக போன் போட்டு ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தான்.மன்னிக்கவும் அவன் பேசுவதாக நினைத்துக் கொண்டு மொத்தப் பேருந்திருக்கும் டமாரம் போட்டுக் கொண்டிருந்தான்.பெங்களூர் சில்க் போர்டிலிருந்து தஞ்சை கிளம்பிய அந்த பேருந்தில் அவனது அலம்பல் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருந்தது.
முதல் நாள் தியேட்டர் வாசலையும், டாஸ்மாக் அமைப்பையும் த‌னது செல்போன் உரையாடல் மூலம் தமிழ் தெரிந்த அனைவரது கண் முன்னே வரைந்துக் கொண்டுவந்திருந்தான்.அவனது இருக்கைக்கு முன்னே ஓர் அழகிய காதல் ஜோடியும் அவனது உரையாடலில் உரைந்துக் கொண்டிருந்தது.காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் போலும்.அவர்கள் தலையில் நரை நிறம்பிருந்தது.அவனது உரையாடல் எல்லை மீறல்கள் செய்த போதெல்லாம் , பயத்தில் காதலி காதலன் கைகளை பற்றிக் கொண்டாள்.நகரத்தின் மீதுள்ள பயம் அவளை விட்டு இன்னும் முழுதாக அகலவில்லை அவளிடம்.பரப்பரப்பான சாலைகள்,ஆமையென நகரும் வாகனங்கள்,திறக்காத ஜன்னல் ஓர இருக்கை என அவளுக்கு பார்ப்பதெல்லாம் பயம் தருவதாக இருந்தது.அடிக்கடி ரகசியமாக கணவனின் காதில் ஏதோ சொல்கிறாள்,அவரும் பதிலுக்கு ஒரு முறை அவனை முறைத்துவிட்டு அவளுக்கு சமாதானம் சொல்ல.பற்றிய கரங்களோடு கணவன் மீது சாய்கிறாள்.பயம் சற்று தளர்ந்ததாக உணர்கிறாள்.
இந்த அழகிய காட்சிக்கு ஏற்றதாக இளையராஜாவின் கீதங்கள் இசையின் வேர்களி வழி (ஹெட்போன்ஸ்) ஒலிக்க , நண்பரகள் இருவரும் அந்த செல்போன் ஆசாமியை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.யாரது பார்வையும் அவன் கண்டதாக தெரியவில்லை.மறுநாள் அட்டவனையை முடித்துவிட்டு தனது சென்ற வருட டாஸ்மாக் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.
“இந்த ஃபுல் சவுண்டுலையும் அவன் சவுண்டு கேக்குது டா.” என நண்பர்கள் எரிச்சலுடன் அவனை மீண்டும் ஒரு முறை பார்த்தனர்.வேண்டுமென்றே அவன் காதுப்பட இருவரும் பேச தொடங்கினர்.தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அவன் உணர சற்று நேரம் பிடித்தது.
“டேய் நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா” என்று கவுண்டமனி பாணியில் அவர்கள் பேசிய பின்பு தான் சற்று அமைதியானான்.அடைமழை பெய்து ஒய்ந்தது போல ஓர் அமைதி.மொத்த பேருந்து அந்த அமைதியை ரசித்திருக்க அதற்குள் அவனது கைபேசி ஒலித்தது..
“இவன் சும்மா இருந்தாலும் விடமாட்டாங்கப் போல.இன்னைக்கு நமக்கு சிவராத்திரித் தான்” என்று இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க‌னர் .பேருந்தில் அனைவரும் தங்களை அறியாமலே அவனது உரையாடலை கவனித்தனர்.அவனது குரல் முதல்முறையா அந்தப் பேருந்தில் வேறு தோணியில் ஒலித்தது…
“ஊருக்கு போய்ட்டு இருக்கேன் “
…….
“சில்க் போர்ட் கிட்ட வண்டி வந்திருக்கு”
…..
“கண்டிப்பாவா …நான் வேணும்னா ..”
“ஓ.கே ..வேற வழியே இல்லாட்டி நான் வந்திடுரேன்..”
என்று அவனது டெசிபெல் மெல்ல மெல்ல குறைந்தது.அந்த அலுவலக அழைப்பை அவன் முடிக்கும் போது அவனது முகமும்எண்ணைய் கத்தரிப் போல் வதங்கிருந்தது .தனது பையை சுருட்டிக் கொண்டு , சுற்றி ஒரு முறைப் பார்த்தான்,அவனை கண்டுக்கொள்ளாதது போல் அனைவரும் நடிப்பதை அவன் உணராது,நேராக முன்னே சென்று நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்ல,பேருந்திலிருந்து இறங்கிச் சென்றான்.
“ஆண்டவன் இருக்கான் மச்சி..” என நண்பர்கள் இருவரும் அவனை கேலிப்பேச‌…
“இப்படி ஊருக்கு போகிற வழியில கூட இறங்கி திரும்ப‌ ஆபிசுக்கு வரச் சொல்லுவாங்களா..பாவங்க, அந்தப் புள்ள ஆசை ஆசையா ஊருக்கு கிளம்புச்சு..” என அவள் தன் கனவனிடம் சொல்ல.அவளது மெல்லிய குரல் எட்டிய தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் அவனுக்காக வருந்தியது.

Saturday, August 30, 2014

கோபல்ல கிராமம் - கி.ரா

ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.

பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.

கிடை,உடை மரங்கள்,சிள் வண்டு,கூகை,கரிச்சான்,தண்ணிர் கோழி,கதுவாலிப் பறவை,ஊருணி,குரவை மீன்,மர நாய்கள்,வெருகுப்  பூனை, பாம்படங்கள்(தோடு?), லேஞ்சி(வேட்டி?), பைதாக்கள், ஓணி, கவனை(அருவாள்?), லஞ்சை(வெட்கம்?), தொரட்டி(மூக்குத்தி?), புல்லாக்கு,மேழி(மண்)பொடுதலை இலை ...

என பட்டியல் நீள்கிறது[என்னிடமுள்ள அகராதியிலும் சிக்கவில்லை,தெரிந்தவர்கள் சொல்லவும்] ,சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.

Friday, April 11, 2014

புதிதாக லாப்டாப் வாங்குபவர்களுக்கு சில தகவல்கள்...

1.வாரண்டி :

பொதுவாக hardware க்கு 1வருடம் , அதன் software க்கு 3மாதம் வாரண்டிக் கிடைக்கிறது.

2. OEM operating system 

தற்பொழுது வரும் லாப்டாப்புக்கள் அதிகப்பட்சமாக OEM operating system கொண்டதாக இருக்கிறது.OEM என்றால் Original Equipment Manufacurer.நீங்கள் வாங்கிய லாப்டாப்புடன் முன்பைப் போல எந்த வித CD/DVD (retail operating system)யும் தற்பொழுது கிடையாது.operating system  லாப்டாப்பிலே இருக்கும்.

3. OEM operating system பயன்கள்

விலை சிறிது குறைவாக இருக்கும்,மற்றப்படி இதனை  அந்தந்த லாப்டாப்பின் மட்டுமே உபயோகிக்க முடியும்.இதனால் வேறு எந்த கணினியிலும் இதை உபயோகிக்க முடியாது.

4.செய்ய வேண்டிய முதல் வேலை

லாப்டாப் வாங்கியவுடன் முதலில் உங்கள் operating system க்கு  recovery disk  எடுத்து வைக்க வேண்டும்.நீங்கள் தனி டி.வி.டி யிலோ அல்லது pen drive யிலோ இதனை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

5.எதற்காக  recovery disk  எடுக்க வேண்டும்

உங்கள் operating system பழுதானால் மீண்டும் உங்கள் கணினியில் operating system install செய்ய அதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.

6.எடுக்காவிட்டால்..

எடுக்காவிட்டால் , நீங்கள் உங்கள் லாப்டாப் நிறுவனத்திற்கு தொடர்புக் கொண்டு அந்த recovery disk  ஐ வாங்கிக் கொள்ளலாம்.3 மாதத்திற்குள் இருந்தால் இலவசமாக உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.இல்லையெனில் கட்டணம் செலுத்த வேண்டும் (2000 - 3000 செலவாகும்).குறிப்பு :  எந்த ஊரில் வாங்கப்பட்டதோஅங்கே தான் அனுப்பி வைப்பார்கள்.

7.வெளிநாட்டில் லாப்டாப் வாங்கியிருந்தால்.

நீங்கள் வெளிநாட்டில் ஒரு லாப்டாப் வாங்கி, சிறிது மாதம கழித்து இந்தியாவிற்கு வந்துவிட்டீர்கள்.திடிரென உங்கள் லாப்டாப் பழுதாகவிட்டது.உங்கள் வாரண்டி இந்தியாவில் செல்லுமென்றால் உங்கள் hardware சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இந்தியாவிலும் பார்க்கப்படும்.ஆனால் operating system போன்ற software சம்மந்தப்பட்ட எதுவும் இங்கு பார்க்கப்படாது.உங்களிடம் recovery disk இல்லாவிட்டால் , அது உங்களுக்கு அந்த நாட்டின் முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள்.அந்த நாட்டில் உங்கள் நண்பர்கள் இருக்கும்  பட்சத்தில் , நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கச் சொல்லலாம்.அவ்வளவு தான் செய்ய முடியும் . இல்லையெனில் மீண்டும் 8000 - 10,000 செலவு செய்துத் தான் புதிதாக retail version operating system தான் வாங்க வேண்டும்.

குறிப்பு : உங்கள் hard disk பழுதாகிவிட்டால் , அவர்கள் அதனை மட்டுமே சரி செய்வார்கள்.நாம் தான் அவர்களுக்கு recovery disk கொடுக்க வேண்டும்.இல்லையெனில் நம் கதி அதோகதி தான்.

8. recovery disk  வேலை செய்யவில்லை என்றால்..

அவர்கள் அனுப்பிய  recovery disk  வேலை செய்யவில்லை என்றால் , முடிந்த வரை அவர்களின் customer forum (இணையப்பக்கம்) உரையாடலில்  தேடிப்பார்க்கவும்.அதில் உங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும்

customer care க்கு தொடர்பு கொண்டால் , உங்களது லாப்டாப்பை அவர்களிடம் கொடுக்க சொல்லுவார்கள்.அது வெளிநாட்டில் வாங்கியிருந்தாலும் கூச்சப்படாமல் மீண்டும் அந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கச் சொல்லுவார்கள்.

customer care ஐ தொடர்பு கொள்வதை விட , customer forum  த்தில் உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள்,உங்களுக்கு போதுமான தீர்வு அங்கு கிடைத்துவிடும்.ஆனால் , கொஞ்சம் நிதானமாக தேட வேண்டும்.குறிப்பாக பொல்லாதவன் பட தனுஷ் போல விடாது இணையத்தில் அவர்களுடன் சண்டை பிடிக்க வேண்டும்.

[இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலை மட்டும் கால அவகாசங்கள் அனைத்தும் ஒரு தோரயமான மதிப்பே.]

Tuesday, April 1, 2014

NOTA - the game changer !!!

Author : Vijayanandh Vinayagam 

Article 19 1(a) of our Constitution (Bible, Geetha, Quran of our Mother India) says, we people have rights to express our view "mutely" on any situations including electoral process in this democratic country from the day it was created have been kept maximum volume now after PIL (Public Interest Litigation) was filed by an NGO,People's Union for Civil Liberties has been passed by Supreme Court with the option of None Of The Above in Electronic Voting Machine/Ballot paper, I believe it will remind you the question papers where you go crazy humming Inky Pinky Ponky at the last minute of exam to select an option, but this is not a joke and something you wanted to know in depth to possess your rights.

What do they mean by NOTA?
In a historic verdict that will empower the Indian voters, the Supreme Court (Sept 27, 2013) said, for a vibrant democracy electors must have the rights to reject all the candidates in the fray, with the option 'None of the Above' (NOTA) in voting machines. This simply consider the NOTA option as not willing to vote for any of the candidates in the constituency and counting as 'Negative vote' not compromising secrecy.

Facts you would love to know about NOTA!

What if NOTA gets higher votes?:
Election commission sources said the electoral law on the issue is silent, the new 'none of the above' option may virtually amount to an invalid vote and those getting the highest votes among the candidates will be declared as winner! to be very clear, if NOTA gets higher votes count, then the candidate with highest number of votes in that particular constituency will be selected. Perhaps, if most constituencies tend to get more NOTA counts, Election commission would be forced to go for another change say throw the candidates out and place new candidates. But this will have repercussions on many way like spending public money for re-election, hope EC will come up with some good recommendation later. Right now think about your rights and elect a ethical candidate.This will bring some 'Systematic change' in the election process as 'the political parties are forced/compelled to accept the will of the people (Pinch..!! Yeah it's true)  

What made Law makers to zip their mouth?:
Yes, the National parties were cautiously reacted to the verdict, because they are now forced to nominate a sound candidate. For democracy to survive, it is essential that the best available men should be chosen as people's representatives for proper governance of the country. This can be best achieved through men of high moral and ethical values, who win the elections on a positive note. The voting machines in the parliament have 3 buttons "YES", "NO" and "ABSTAIN", Similarly, the NOTA button being sought for by the petitioners is exactly similar to the ABSTAIN button since by pressing that the voter is in effect saying that he is abstaining from voting since he does not find any of the candidates to be worthy of his vote.

What's the stuff with 49-O?:
Yes, there is an option as 49(O)!! Most of them have not even bothered to ask for it/search for it. Under the existing provisions of section 49(O) of the Representation of People Act, a voter who after coming to a polling both does not want to cast his vote, has to inform the presiding officer of his intention not to vote, who in turn would make an entry in the relevant rule book after taking the signature of the said elector !!! That was funny??? this is arbitrary, unreasonable and violate Article 19. Ignore this now. Our Judiciary system went out of box to observe this violation and had given a chance altogether to maintain your secrecy under section 128 of RP Act.

Who gets the most advantage?:
Yes, they are called lazy voters, middle class, NRIs who wait for some positive signals from Finance minister at the time of budget every year and feel lazy or dissatisfied, whatever it might be. It's your right and do not allow any unscrupulous elements to impersonate the dissatisfied voter and cast a vote, be it a NEGATIVE one.! But don't ever turn up to polling booth to select only the NOTA option, but before being present there, do some home work on candidates/parties before blindly selecting an option. 

Eventually, voters' participation explains the strength of the democracy. Lesser voter participation is the rejection of commitment to democracy slowly but definitely whereas larger participation is better for the democracy.

Sounds good ! Will they implement soon? 
For the first time, Election commission will provide this 'NOTA' option button for 11 crores voters who will exercise their franchise in the five states going to polls beginning next month. Let's wait and see what changes it will bring in this big democratic nation in near future.

Earlier, the apex court had restrained people in custody from contesting elections. It has also ruled that MPs and MLAs would stand disqualified after being convicted of serious crimes. The government, however, has brought an ordinance seeking to negate the court's judgment striking down a provision in the electoral law that protected convicted lawmakers from immediate disqualifications

There are MANY MORE to come for the change here..!!!

Finally,
The voters' participation in election is indeed the participation in the democracy itself. Non-participation caused frustration and disinterest, which is not a healthy sign of a growing democracy like INDIA.. JAI HIND !!!

Monday, March 17, 2014

விழித்தும் கலையாத கனவு

அலைச்சலில் படுத்தவுடன் உறங்கிப் போயிருந்தேன்.ஏதோ ஓர் சப்தம் என் உறக்கத்தின் நிசப்தத்தை  சோதித்தது.அருகில் நண்பன் எனது கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் தான் அது.

"ஏதாவதுனா எனக்கு போன் பண்ணுங்க, நான் காலையில‌ 7 மணிக்கு வந்துட்றேன்.அவங்களே சாப்பாடு,மாத்திரை எல்லாம் கொடுத்திடுவாங்க."
என்று மருத்துவமனையில் மணியின் அப்பாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றது  நினைவிற்கு வந்தது.இமைகள் இரண்டும் போராடிக்கொண்டிருக்க ,நண்பன் மூலம் சட்டென எரிந்த‌ ட்யூப் லைட் வெளிச்சத்தில் பட்டென என் உறக்கம் கலைந்தது.

"யாரு டா இந்த நேரத்துல , மணி அப்பாவா ?"

"இல்லை..கவி தான் பேசினாள்,அங்க ரமாக்கு ஏதோ பிரச்சனையாம்..நம்மளை உடனே கூப்பிடறாங்க" என்றான் பதட்டத்துடன்.

கவியிடம் விபரங்கள் ஏதும் கேட்க முடியாமல் அவன் தவித்தான்.அவள் அவனிடம் சொன்னது.."சீக்கிரம் கிளம்பி வாங்க" என்பது மட்டும் தான்.அங்குள்ளப் பிரச்சனை என்னவென்று புரியாது இங்கு இருவரும்  காலில் சுடு நீரை கொட்டாத குறையிலிருக்க , மற்றொரு நண்பன் எகிப்து மம்மி போல் உறங்கிக் கொண்டிருந்தான்.புளுக்கத்திலும் ,கண் கூசும் விளக்கின் வெளிச்சத்திலும் ,உரையாடலின் சப்தத்திலும் துளிக்கூட‌ கலையாத அவனது உறக்கம் அவனது புட்டத்தில் நான் கொடுத்த உதையில் கலைந்தது.

"டேய் , அங்க உன் தங்கச்சிங்களுக்கு என்னமோ பிரச்சனையாம்...உடனே வர சொல்றாங்க, நாங்க முன்னாடி போறோம்..நீ வீடெல்லாம் பூட்டிட்டு கிளம்பி வா.."என்று சொல்லிவிட்டு , அவனது கேள்விகள் எதையும் காதில் வாங்காமால் தோழிகளின் விடுதியை நோக்கி இருவரும் கிளம்பினோம் .மனதிற்குள் ஆயிரம் பதட்டம் இருந்த போதும் நண்பன் என்னிடம்..

"உன்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேற போகுது போல‌" என்றான்.எனது சின்ன சின்ன ஆசைகளின் ஒன்றான மகளிர் விடுதிற்குள் நுழைய வேண்டுமென்ற அந்த ஆசையை பற்றி தான் அவன் நினைவுகூர்ந்தான்.. "டேய் அதுக்கு இதுவாடா நேரம்.நல்ல நேரம் பாத்து சொல்ற பாரு" என்று அவனை கடிந்துக்கொண்டேன்.

எங்கள் வீட்டிலிருந்து விடுதி  3 தெருக்கள் தள்ளியுள்ளது.ஆதலால் முடிந்த வரை ஓடியும்,தெரு நாய்களை காணும்போதெல்லாம் நடந்தும் தூரத்தினை குறைத்தோம்.இதே போல் தான் நேற்றும் ஓடிக்கொண்டிருந்தோம் மணியிடமிருந்து செல் அழைப்பு வந்ததும்.தற்பொழுது போல் நேற்று  ஓடியது தெரிவிலும் அல்ல இரவிலும் அல்ல.நேற்று காலை ரயில் தண்டவாளத்தில் தான் ஓடினோம். நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் அலுவலகத்திற்கு செல்வதற்காக ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தோம். இது எங்களுக்கு முதல் வேலை , படித்து முடித்து ஒரு வருடம் கடந்த பிறகும் வேலை கிடைக்காத எங்களுக்கு மும்பை தனது அன்புக் கரங்களை நீட்டியது.புதிய இடம் , அறியாத மொழி என்ற போதும் மும்பை எங்களுக்கு சிறிது நாட்களிலே பழகியிருந்தது.பெண்கள் இருவரும் எங்கள் நால்வரின்  நட்பின் மீது கொண்டிருந்த  நம்பிக்கை ஓர் புதிய அடையாளத்தை தந்திருந்தது.5 ஸ்டார் படத்தில் வருவது போல்  ஓர் அழகிய நட்பு பிடித்திருந்தது.எங்களில் நானும் மணியும்  பள்ளி பருவத்திலிருந்து நண்பர்கள் . பள்ளியில் துவங்கிய நட்பு பணியில் அமரும் வரை தொடர்வ‌து அனைவருக்கும் அதிசியமாக இருந்தது. மும்பை வடாப்பாவ் , மரைன் ட்ரைவ் , பானிப் பூரி , வேற்று மொழி நண்பர்கள் என வாழ்வின் புதிய பரிமாணத்தை சுவாசிக்க ஆரம்பித்திருந்தோம். மும்பை லோக்கல் ரயிலை தவிர மற்ற அனைத்தும் இனிதாகவே இருந்தது.எங்களுக்கு மட்டுமல்ல மும்பையில் யவருக்குமே ரயில் பயணம் இனிதாக இருந்ததில்லை.அப்படி ஒரு நெரிசல்.நெரிசல் என்றால் , அதை நாம் தமிழகத்தில் கண்டிருக்க முடியாது.3-4 நிமிடத்திற்கு ரயில் வந்துக்கொண்டேயிருந்தாலும் , மக்களின் கூட்டம் இருந்துக்கொண்டேயிருக்கும்.மும்பை ரயிலில் புட் போட் அடிப்பதெல்லாம் ஒரு கலை.நம்மால் அதெல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க‌ முடியாது.நமக்கு பின், புட் போர்டில் ஒருவரிசையில் சிலர் இருந்தால் மட்டுமே ரயிலில் ஏறிட வேண்டும்.அப்படிப்பட்ட‌ கடைசி வரிசை இல்லாத போதும் மணி துணிந்து ஏறினான்.அவனது துணிவு 2நிமிடத்திலே முடிந்தது.விழுந்த தகவல் கிடைத்தும் தோழிகள் இருவரையும் விடுதிக்கு போக சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் ஓடத்துவங்கினோம்.அவனை தேடிப்பிடித்தது, மருத்துவமனையில் சேர்த்தது எல்லாம் ஓர் பெரிய கதை.அதை பற்றி யோசித்தாலே எனது மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது. அன்பு கரம் நீட்டி வரவேற்ற மும்பை நகரம் ஏனோ  கடந்த இரு தினங்களாக எங்களை ஓட வைக்கிறது.நேற்றைய  ஓட்டத்திலும் , அதன் பின் நடந்த நிகழ்வுகளிலும் என் மனமும், உடலும் என்னை விட்டு தனியே நின்றுவிட்டது போலும்.அவை இரண்டுமே என்னுடன் இல்லாது உறக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட உறக்கத்தை இறக்கமின்றி  கலைத்து தான் த‌ற்பொழுது தோழியின் விடுதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அவளது அறை 4வது மாடியிலிருந்தது,இதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் , அங்கு எறிந்த மின் விளக்குகள் உறுதி செய்தது.நாங்கள் அவளது அறைக்கு நுழையும்பொழுது சில வேற்று மொழியினர் சூழ்ந்திருந்தனர்,

கவி ரமாவின் தோளை பிடித்து  "ஏய் என்ன பாருடி " என்று உலுக்கிக் கொண்டிருந்தாள்.

எங்கள் வருகையை அறிந்ததும்கவி அங்கிருந்து எழுந்து வந்து நடந்தவற்றை சொல்ல முயற்சித்தாள் . கை தவறிய பொருட்களை பிடிக்க முடியாமல் தவிப்பது போல , வார்த்தைகள் தவறி அழத் துவங்கினாள்.சொல்ல முடியாமல் தவித்தால்.ரமாவை சுற்றி சிலர் நின்றதால் , அவளது முகத்தை எங்களால் பார்க்கவும் இயலவில்லை,நண்பன் சிலரை நகர சொல்லிவிட்டு ரமாவை காணச் சென்றான்.அருகிலிருந்தோர் ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் என்னிடம் பேசினர்.அந்த அர்த ராத்திரியில் வேற்று மொழியினை எனது மூலை எற்றுக்கொள்ளவில்லை.தமிழ் மட்டுமே அதன் நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்டது.

கவியின் அழுகை அடங்கிருந்தது.."என்னான்னு தெரியல டா ..தூக்க‌த்தில‌ எழுந்து அழுதுக்கிட்டே இருக்கா..ஏதேதோ மொனவுறாள்..எனக்கு என்ன பன்றதுனு தெரியல..பயமா இருக்கு " என்றாள். "ஏய் , அழுகையை நிறுத்து,இங்க என்னை பாரு " என்று நண்பன் ரமாவிடன் பேசினான்.. நானும் அவள் அருகே சென்றேன்,அவளது கண்கள் விழித்திருந்தது , அந்த பார்வையில் பயம் மட்டுமே இருந்தது.அவளுக்கு முன் இத்தனை பேர் நிற்பதை அவள் அறிந்திருக்கவில்லை.அவள் அழுதுக்கொண்டே ஏதோ முணுகினாள்...

"மணி, ட்ரேன் , நாய் ..."என்ற வார்த்தைகளை மட்டும் கேட்க முடிந்தது.அவளது வார்த்தைகளின் அர்த்தம் எங்களுக்கு புரிந்திருந்தது.முன்தினம்  மருத்துமனையில் ரத்தத்தில் நினைந்த மணியின் சட்டையை பார்த்தவுடனே மயக்கம் போட்டிருந்தாள்.அவள் கண்களில் பயம் அங்கேயே தொற்றிக் கொண்டிருந்தது.அவளது நினைவுகளை நண்பர்கள் ஏதேதோ சொல்லி மாற்றியிருந்த போதும்.அவளது ஆழ்மனதிலிருந்து அது நீங்கவில்லை .கனவிலும் நினைவுகளின் பிம்பங்களை பார்த்திருக்க கூடும், ஆதலால் தான் நினைவிழுந்து மீண்டும் மீண்டும் மணியின் பெயரையே உச்சரித்தாள்.அவளை அந்த நினைவிலிருந்து மீட்டிட நண்பன் போராடிக் கொண்டிருந்தான், நான் திடிரென நண்பனை விலக சொல்லிவிட்டு ..அவளை பலாரென அறைந்தேன்...

ஆங்கில வார்த்தைகளும் , ஹிந்தி வார்த்தைகளும் அந்த பலார் சப்தத்தில் ஒதுங்கிச் சென்றன.ரமாவின் பார்வையும் மாறியது. "நான் எங்க இருக்கேன்" என மொக்கையாக கேட்காமல் "நீங்க ஏன்டா இங்க வந்தீங்க " என்றாள்,பின் சுற்றமும் உணர்ந்தாள்.அவள் ஒருவாறு என்ன நடந்திருக்கும் என கனித்தாள்.மற்றவர்களை பேசி அனுப்பிவிட்டு நாங்க நால்வர் மட்டும் வரவேற்பரை என்று பெயர் மட்டும் சூட்டப்பட்டிருந்த  இடத்திற்கு வந்தோம்.

நாங்கள் வரவேற்பரைக்கு வரவும் மற்றொரு நண்பன் அங்கு வந்த சேரவும் நேரம் சரியாக இருந்தது.ஒவ்வொரு நண்பர்கள் வட்டத்திலும் , பெண்களுக்கு அண்ணனாக ஒரு அப்பாவி தத்தெடுக்கப்படுவான்.ரக்க்ஷாபந்தனுக்கு அவன் கையில் அனைத்து வண்ணங்களிலும் கயிறுகள் இருக்கும்.கயிறுகள் நிறைந்த வேகத்தில் அவன் பர்ஸ் கரைந்திருக்கும்.அப்படி எங்கள் குழுவில் இருக்கும் தத்து அண்ணன் தான் அவன்.

"சரி என்ன ஆச்சு அத முதல சொல்லுங்க..நான் வழி தெரியாம அங்கையும் இங்கையும் சுத்திட்டிருந்தேன்..இதுல இந்த தெரு நாய் வேற..:"என்றான்.. அவனிடம் நடந்த அனைத்தையும் எனது ஆசை உள்பட சொல்லி முடித்தோம்.

"ஆனா மச்சி இவளோட கனவுல ஒரே ஒரு லாஜிக் தான்டா இடிக்குது..மணி,ட்ரேன் எல்லாம் ஓ.கே ..நாய் எங்கேந்து வந்துச்சுன்னு தெரியல.." என்று அவளது நினைவுகளை புத்திசாலித்தனமாக திருப்புதவாக நினைத்துக் கொண்டு தெரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். சாப்பிட்டு திரும்பனப்போ..ஒரு நாய் என்ன பாத்து ஊல விட்டிச்சு..அது பாக்கவே ரொம்ப பயமா இருந்திச்சு" என்று சிறுபிள்ளை போல் பேசினாள்...அவளிடம் மீண்டும் பயம் தொற்றிவிடுமோ என்று தோன்றியது.எனது ஆசைகளை பற்றி பேச்செடுத்து , அங்கு கூடியிருந்த பெண்களை பற்றி விளையாட்டாக விசாரித்தோம்.ஏதேதோ பேசி அவள் முகத்தில் சிறு புன்னைகையை முளைக்கச் செய்தோம்.அவளை  பேசி பேசியே தேற்றினோம்.எங்களால் அந்த சூழலில் முடிந்ததும் அது மட்டும் தான்.நேரம் 12ஆகியிருந்தது.ஒருவாறு ரமா பயத்தினை விட்டு விலகியிருந்தாள்.ரமாவிடமும் கவியிடமும் சிறு ஆறுதல் வார்த்தைகளை தூவ‌விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

மறுநாள் நடக்கயிருக்கும் மணியின் அறுவைசிகிச்சை பற்றியும் , நாளையும் இவள் அங்கு வந்தாள் என்ன ஆகும் என்பதை பற்றியும் நண்பர்கள் புலம்பிக்கொண்டிருக்க , எனது நினைவுகள் மட்டும் கவியின் கனவை பற்றியே இருந்தது.அவள் விழித்திருந்தாள் , ஆனால் கனவிலிருந்து வெளியேரவில்லை.திரைப்படங்களில் வரும் தூக்கத்தில் நடக்கும் கதாப்பாத்திரம் போலயிருந்தது.விழித்தும் கலையாத கனவு அது என்று என்னுள் நான் சொல்லிக்கொண்டேன்.

மும்பை ரயில் அவளது நினைவுகளை தூண்டிக்கொண்டேயிருந்தது , சில நாட்களுக்கு கலையாத கனவுகள் தொடர்ந்தன .மணியின் விபத்தும் , இவளது கனவும் பெற்றோர்களுக்கு பெரிதும் மன உளைச்சலை தந்தது. நான் ரசித்த மும்பையும் , நான் நேசித்த இந்த நண்பர் வட்டமும் எனது அடுத்த சில வருடங்களை வண்ணங்கள் பல பூசப்போவதாக நான் கண்ட கனவு அவளது கலையாத கனவால் மெல்ல மெல்ல கலைந்தது.